Translate

Translate

எனது வலைப்பதிவு பட்டியல்

மொத்தப் பக்கக்காட்சிகள்

பிரபலமான இடுகைகள்

திங்கள், 12 அக்டோபர், 2009

கங்காஆரத்தி

கங்காஆரத்தி தசாச்வமேத கட்டபடித்துறையில் மலை 6.30 மணிக்கு ஆரம்பிக்கிறார்கள். கங்கா ஆரத்தி எழு பண்டாக்களால் நடத்தப்படுகிறது. புஷ்பம், ஊதுவ்ற்றி, சாம்பிராணி, தீப அடுக்கு, கற்பூரம், தீப தூபம், வெண்சாமரம் கொண்டு ஆரத்தி கங்கமாதவிற்க்கு சிறப்பாக பூஜை நடைபெறுகிறது.

வெளிநாட்டினர் பெருமளவில் கலந்து கொண்டு ரசித்து அவர்களும் பூஜையிலும் பஜனையிலும் கலந்து சிறப்பிக்கின்றனர். பூஜைக்காக அமைக்கப்பட்ட மேடையில் பூஜை நடைபெறுவதும் அதற்கு எதிர்த்தர்ப்போல் யாத்ரீகர்கள் அமர அமைக்கப்பட்டுள்ள மேடையில் அமர்ந்து பூஜையில் கலந்து கொண்டு ரசிப்பதை பார்ப்பதும் மகிழ்ச்சிகரமான காட்சி.

அமர்ந்திருக்கும் யாத்ரீகர்கள் நீளமான கயிற்றை கட்டி அந்த மணியை அடிப்பதும் அதற்க்காகவே முன்னதாகவே வந்து இருக்கை பிடிக்க போட்டா போட்டிகளும் ரம்மியமானவை. பூஜைகள் நடை பெறும் போது டிரம் ஜால்ரா உடுக்கை சப்தம் முழங்க மணி சப்தம் கேட்கிறது. நான்கு திசைகளிலும் வழிபாடு நடத்துகின்றனர்.

யாத்ரீகர்கள் படகிலிருந்தும் மேடைமீது அமர்ந்தும் தீப ஆரத்தியை கண்டு களித்து தாங்களும் சிலவற்றில் பங்கு பெறுகின்றனர். கங்கா மாதகி ஜெய், ஹர ஹர மகாதேவா என்கிற கோஷங்கள் எங்கும் எதிரொலிக்கிறது. ஆரத்தி எடுத்து முடிந்தவுடன் தீபமேற்றுகின்றனர். ஒரு மணி நேரம் பூஜை நடைபெறுகிறது. திரும்புவதற்கு மனமின்றிதான் கங்கா ஆரத்தி பூஜை முடிந்தவுடன் திரும்பவேண்டியிருந்தது

கங்கைபடித்துறை

-இங்கே ஓடும் புண்ணிய நதியான கங்கை கரையில் 64 படித்துறைகள் உள்ளன. இவற்றுள்ளும் மணிகர்ணிகா- தசாதச்மேத- பஞ்சகர்நிகா- வருனாசங்கமம் -ஆசி சங்கமம் இந்த கட்டங்களில் ஸ்நானம் செய்வது அல்லது நீரைத் தலையில் தெளிதுக்கொள்வது பஞ்ச தீர்த்த ஸ்நானம் என்று அழைக்கப்படுகிறது.

மணிகர்ணிகா கட்டத்தில் தினமும் உச்சிப்பொழுதில் முப்பத்து முக்கோடி தேவர்களும் நீராட வருவதாக ஐதீகம் அதனால் உச்சி வேளையில் நீராடுவது நல்லது.

நூற்றுக்கணக்கான படகுகள் சென்று கொண்டும் வந்து கொண்டும் இருக்கும் காட்சி ரம்மியமானவை. படகில் செல்லும்போது ஸ்நானக் கட்டங்களையும் ஸ்நானம் செய்பவர்களையும், அமர்ந்துள்ள சாதுக்கள், கர்மா செய்ய அமர்ந்துள்ள பண்டாக்கள், மறுபுறம் எரிந்து கொண்டிருக்கும் பிரேதம் அனைத்தும் தரிசிக்கவேண்டியவையே.

காசியில் உள்ள படித்துறையில் மிக உயரிய படிக்கட்டுகளும் படித்துறை கோவில்கள், மடாலயங்கள், மயானங்கள் ஆகியவை உள்ளன. மலர் மாலைகள் ஈமச்சடங்குகள் பொருட்கள் எல்லாம் கங்கையில் கலந்து செல்கின்றன.ஈமக்கிரியை காரியத்தை நடத்திக் கொடுக்கும் சாஸ்திரிகள் அஸ்தி மற்றும் சம்பந்தப்பட்ட பொருட்களை ஆற்றின் அக்கரையில் கரைக்க அறிவுறுத்தப்பட்டாலும் காலத்தின் அருமை கருதி அனைவரும் கங்கையிலே கரைத்து விடுகின்றனர்.

கருத்துகள் இல்லை: