அக்ஷயவடம்'' இலையில் விஷ்ணு பகவான் சயனித்து உள்ளார். இதனால் இது அக்ஷயமாகக் கருதப்படுகிறது.'' இங்கு மாதவ பகவான் எழுந்தருளியிருந்து நித்ய வாசம் செய்கிறார். அவரைத் தரிசனம் செய்வதால் மனிதன் மகாபாபங்களினின்றும் விடுதலை பெறுகிறான்.'' பிரயாக் தீர்த்தத்தில் அக்ஷயவடம்'' முக்கியமான மிகவும் மகத்துவம் மிக்க புனிதமான இடமாகும். திரிவேணி சங்கமத்திலிருந்து எதிரில் கோட்டைக்குள் அக்ஷயவடம் உள்ளது. வாரத்தில் 2 தினங்கள் அனைவரும் கோட்டைக்குள் சென்று அக்ஷயவடத்தை தரிசனம் செய்யலாம். மற்றைய தினங்களில் கோட்டைக்குள் செல்ல கோட்டையின் அதிகாரிகளின் அனுமதி பெறவேண்டும். பாதாளபுரி கோயிலில் முன்பு அக்ஷயவடத்தையும் மக்கள் தரிசிக்கிறார்கள். பூமி மட்டத்திற்கும் கீழே இருப்பதால் இது பாதாளபுரி என்றும் சொல்லப்படுகிறது. பாதாளபுரியில் அதிகமாக தெய்வ சன்னதிகள் உள்ளன..
அஷயவடம் செல்லும் ஆலமரகிலையின் வேர் பிரயாகையிலும் நடுப்பகுதி காசியில்லும் நுனிப்பகுதி
கயையிலும் ஒரே நேர்க்கோட்டில் உள்ளது கோட்டைக்குள் இருந்த ஆலமரத்தை முழுமையாக பார்க்க இயலவில்லை
.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக